Wednesday, March 7, 2007

அறிமுகம்

இயல்பான மனிதன்,சுயவிருப்பு,வெறுப்பு கொண்டவன்

குறிஞ்சிகபிலன் என் பெயர்
என்னை பாதித்தவை(வர்கள்)

பெரியார்,குத்தூசி குருசாமி,மா.சிங்காரவேலர், வாழ்கையில் மதிக்கும் சிந்தனையாளர்கள். என்னை உருவாக்கியவன் லூ.க, பிடித்தவை-மின்சாரத்தின் எழுத்து,வீரமணியின் ஆதாரமானபேச்சு,தா.செ.மணியின் தெளிவானபேச்சு, S.V.R.BOOKS, A.MARKS, சங்கமித்ரா எழுத்து.


சமீபத்தில் இணையத்தில் நடக்கும் ஆரிய திராவிட போரட்டம்
என்னை கவர்ந்தது.

அய்யா அடிக்கடி ஒன்று சொல்வார்கள் இந்த உலகில் மாறாதது மாற்றம்
ஒன்றுதான் அந்த மாற்றத்தில் மனிதன் கடவுள் இல்லை என்பதற்காக ஒரு இயக்கம் நடத்தினான். என்பதை நாளைய அறிவு உலகம் நகைக்கும் என்று அறிவு தொலைநோக்கோடு சொன்னார்கள்.

அவரின் கூற்று உண்மையாக நடந்தேறி வருகிறது. இளைய தலைமுறையை
சார்ந்த நிறைய தோழர்கள் பெரியாரியலை உள் வாங்கி விவாத களம் கண்டு
வருவது குறித்து மகிழ்ச்சி.

மீண்டும் சந்திப்போம்.
வணக்கம்.

No comments: